Vinmeenidam vendokol

   விண்மீனிடம் வேண்டுகோள்


   விருப்பத்தை வேண்டிக்கொள் என்றது
   விண்மீன்  வீழ்கையில்,
   "விழ வேண்டாம் இனி
   விண்மீன்கள்  யாவும்!  " -என்
   விருப்பம் இதுவே என்றதும்
   வியந்த விண்மீனிடம்
   விழைந்தேன் இப்படி:
   விட்டுச் சென்றவர் யாவரும்
   விண்மீன்களாக !-நித்தமும்
   விசாரிப்பேன் நலனை
   விண்ணை நோக்கி மண்ணிலிருந்தே!
   வானிலிருந்தும்
   விலகிவிட்டால் -அவர்களை
   வேறெங்கு காண்பேன் நான்!
   விருப்பத்தைக் கேட்டு
   வருத்தத்துடன்
   விழுந்தது அந்த விண்மீன்!
   விடையின்றி விண்ணை      நோக்கியபடியே
             நான்!
                               -வி.ஆஷாபாரதி
 
 
 
 
    

No comments