Header Ads

test

Kaatru kavithai

காற்று
காற்று கொணர்ந்து வந்தது
கானக மரங்களின்
கரங்களான
கிளைகளை -நான்
குளிர் காய;
கரங்களை இழந்த
கானக மரங்களின் துயரால்
கொதித்தது என் மனம்
கடும் குளிரிலும்.

"காலங்களான பின்
கரங்கள் வளர்ந்திடும் -அந்த
கானக மரங்களுக்கு ,
காலங்களாய் இதுதான் இயற்கை"  -என
காற்று கோடி முறைகள்
கூறியும்
கேட்க மறுத்தது என் மனம்.

குளிர் காய உதவ நினைத்த
காற்றை போற்றவா? - மரங்களின்
கரங்களை கொணர்ந்த  -அந்த
காற்றைத் தூற்றவா?
கேள்விகளுடன் குளிரில் நான்.
                   -வி .ஆஷாபாரதி



No comments