Vidhaiyaaga vendum

விதையாக வேண்டும்
வாழும் போதே
வீழ்ந்துவிட்டதாய்
வருந்தித் திரியும் நமக்கு,
"விண்ணைத் தொடுமளவு
 வளர்வேன்" என்ற
 மண்ணில் புதைந்த
 விதையின் நம்பிக்கையை
 விரல் நகத்தின் அளவாவது பெற,
 ஒருமுறையாவது
 விதையாக  வேண்டும்  நாம்  -
மண்ணில்  விதையாக வேண்டும் !
                            -வி.ஆஷாபாரதி   

No comments