Header Ads

test

Marangalum mangayarum

மரங்களும்  மங்கையரும்

விதையிலிருந்து வளர்ந்து
வேர் பிடித்து மண்ணுடன்
விளையாடி,
வருடங்கள் ஆன பின்  -அதை
வேருடன் பெயர்த்து
வேற்று மண்ணில் நட்டாலும்
வளர்ந்த மண்ணை பிரிந்த
வருத்தம் மறைத்து
வானுயர்ந்து  வளர்ந்து -பிறந்து
வளர்ந்த மண்ணைப் போல
வேற்று மண்ணிற்கும்
வளம் சேர்க்குமாம்
விஞ்ஞான வளர்ச்சியின்
விளைவாய் மரங்கள் இன்று
வியப்பில்லை இதில் ஒன்றும்
விஞ்ஞான வளர்ச்சிக்கு
வருமுன்பிலிருந்தே -மங்கையர்
வாழ்வும் இந்த மரங்கள் போல்தானே.
                  -வி.ஆஷாபாரதி


 

No comments