Header Ads

test

Mugilgal kavithai

முகில்கள்
விண்மீன்கள்,
வால் நட்சத்திரங்கள்,
வெளிச்சம் தரும்
வெண்ணிலவு,கதிரவன்,
விழும் எரிநட்சத்திரங்கள் என
வகை வகையாய்
வானில் வாழ்கிற  போதும்
வானின் துயரை பகிர  -பிறர்க்கு
வாய்ப்பேதும்
வழங்காமல்
வருத்தங்கள் யாவையும் -தானே
வாடிக்கையாய் சுமந்து-பின்
வடிக்கிறது மழையாய்,
வண்ணம் மாறிய போதும் -மழை
வழங்குவதில்  -சிறு
வேற்றுமையின்றி  புவியை
வாழவைக்கும் முகில்கள்.
            -வி.ஆஷாபாரதி


No comments