Header Ads

test

Vagupparai kavithai

வகுப்பறை

நீதி வகுப்புகளை
நிராகரித்து,
நினைவாற்றலுக்கு மட்டுமே
நித்தம் பயிற்சி தர முயன்ற அன்றே
நின்று விட்டது
நேர்மையான சமுதாயம் உருவாகும்  என்ற நம்பிக்கை.
நீண்டு விட்டது வன்முறையின் கை.
நிறுத்த வேண்டும்
நிலத்தில் வன்முறை  -அதற்கு
நாளும் வேண்டும் -வகுப்பறையில்
நினைவாற்றலுடன்
நீதி போதனை.

வன்முறை
வளர்வதற்கு
வாய்ப்பில்லை
வளரும் சமுதாயம்
வழிமாறும் முன்பே
வாழ்க்கை கல்வியை
விலக்கிடாத
வகுப்பறைகள்
வளர்ந்தால்.
         -வி .ஆஷாபாரதி




No comments